அப்படிலாம் 'அவன' விட முடியாது, எப்படியாவது காப்பாத்திடணும்...! 'ரிஸ்க் எடுத்து நெருப்பில் நுழைந்த ராணுவ வீரர், கடைசியில்...' நெகிழ வைக்கும் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தீயில் சிக்கிக்கொண்ட நாயை காப்பாற்ற போராடி, தீயில் சிக்கி தன் உயிரை மாய்ந்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட குல்மார்க் பகுதியில் ராணுவ அதிகாரிகளுக்கான வசிப்பிடங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு குடிலில் அங்கித் பத்ரஜா என்ற அதிகாரி தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த குடிலில் நேற்று திடீரென தீப்பிடித்தது.

இதில் அவரது மனைவியும், அவர்கள் வளர்த்து வந்த 2 நாய்களும் சிக்கிக்கொண்டார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ராணுவ அதிகாரி தனது மனைவியையும், ஒரு நாயையும் முதலில் காப்பாற்றினார். பின்னர் மற்றொரு நாயை காப்பாற்ற உள்ளே போகும் முன் குடில் முழுவதும் மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்ற குடிலுக்குள் புகுந்தார். அப்போது அவரும் தீயில் சிக்கிக்கொண்டார்.

இதில் அவரது உடல் முழுவதும் நெருப்பு பற்றிக்கொண்டு எரிந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தீ விபத்துக்கான கரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ராணுவத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

INDIANARMY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்