"மாரடைப்பால் இறந்த அப்பா?".. 3 மாசம் கழிச்சு தாய் போனில் எதேச்சையாக மகள் கேட்ட ஆடியோ!!.. திடுக்கிடும் சம்பவம்.

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

3 மாதங்களுக்கு முன்பு நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தெரிய வந்த விஷயம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | லெஹெங்காவால் வந்த சிக்கல்.? பொசுக்குன்னு கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. உறைந்துபோன உறவினர்கள்.!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சனா ராம்தேகே. இவரது கணவர் கடந்த மூன்று மாதங்களுக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

மேலும் தனது கணவர் தூங்கி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார் என்றும் தனது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரிடமும் ரஞ்சனா தெரிவித்துள்ளார்.

இப்படியே கடந்த மூன்று மாதங்கள் ஓடி போன நிலையில் மாரடைப்பால் இறந்து போன ரஞ்சனாவின் கணவர் விஷயத்தில் அப்படியே அனைத்தும் தலை கீழாக மாறி போயுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரஞ்சனாவின் கணவர் மாரடைப்பின் காரணமாக தான் உயிரிழந்து போனார் என்று தான் அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர்.

ஆனால், ரஞ்சனாவின் மகளான ஸ்வேதா தாயை பார்க்க வந்ததும் அனைத்தும் தலை கீழாக மாறியது. தாயின் செல்போனை சிலருக்கு கால் செய்வதற்காக வாங்கிய ஸ்வேதா, தனது தந்தையை ரஞ்சனா எப்படி கொலை செய்தார் என்பதை விளக்கும் ஆடியோவை அவரது காதலர் ஒருவருக்கு அனுப்பியதை எதேச்சையாக கேட்டு அதிர்ந்து போயுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்றை தாய் மீது ஸ்வேதா மீது கொடுத்துள்ளார். இதன் பின்னர், ரஞ்சனாவிடம் நடந்த விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

முகேஷ் திரிவேதி என்ற நபருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ரஞ்சனாவுக்கு இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தூக்கத்தில் இருந்த தனது கணவரின் முகத்தில் தலையணையை நன்றாக வைத்து அழுத்தி கொலை செய்ததாகவும், மறுநாள் காலையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு கணவன் இறந்து போனதாகவும் தெரிவித்துள்ளார் ரஞ்சனா.

இதனிடையே, கணவரை கொலை செய்த பிறகு, தனது காதலன் முகேஷ் திரிவேதியிடமும் இதுகுறித்து ஆடியோ மெசேஜில் தெரிவித்த ரஞ்சனா, காலையில் அனைவரிடமும் மாரடைப்பால் கணவர் இறந்ததாக சொல்ல போகும் பொய் குறித்தும் அதில் தெரிவித்துள்ளது தெரிய வந்தது. மேலும், ரஞ்சனா சொன்னதில் சந்தேகம் இல்லாததால் அடுத்த நாளே அவரது கணவரின் இறுதி சடங்கும் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில் தான், தற்போது மூன்று மாதங்கள் கழித்து தாயின் போனை எதேச்சையாக மகள் ஸ்வேதா பார்த்த சமயத்தில் ரஞ்சனா சிக்கி உள்ளார். மேலும் ரஞ்சனா மற்றும் முகேஷ் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "நீங்க நிஜமா அப்டி நெனச்சீங்களா?".. அஸ்வின் விஷயத்தில் பரவிய வதந்தி??.. ராஜஸ்தான் அணியின் தரமான பதிலடி!!

FATHER, FATHER PASSED AWAY, WIFE, DAUGHTER, AUDIO, MOTHER PHONE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்