VIDEO: ‘யோவ் என்னய்யா பண்ற..?’ திடீர்ன்னு மணமேடையில் ஏறி Ex-Lover செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன மணமகன்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமண மேடையில் முன்னாள் காதலன் திடீரென நுழைந்து செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரை அடுத்த ஹர்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அந்த காதலன் வெளியூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார்.

உடனே அந்த இளைஞரின் காதலிக்கு அவரது பெற்றோர் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்துள்ளனர். வேகவேகமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த டிசம்பர் 1-ம் தேதி இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மணமேடையில் மணமகனும், மணமகளும் மாலை மாற்றி திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது. அப்போது மாப்பிள்ளை மாலை மாற்ற தயாரானபோது, திடீரென முகத்தை துண்டால் மூடிக்கொண்டு இளைஞர் ஒருவர் வேகமாக மணமேடையில் ஏறி மணப்பெண்ணின் வெற்றியில் வலுக்கட்டாயமாக குங்குமம் வைக்க முயன்றார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை தடுத்து முகத்தில் உள்ள துண்டை விலக்கிப் பார்த்தபோது, அது மணப்பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்துள்ளது.

தன்னை காதலித்து விட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ள முயன்றதால், அதை தடுத்து நிறுத்த அந்த இளைஞர் இப்படி செய்துள்ளதாக  கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் அந்த இளைஞரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனை அடுத்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இளைஞருடன் அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

EX-BOYFRIEND, BRIDE, GROOM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்