சாமிக்கு வச்ச முட்டையை சைடிஷ் ஆக்கிய போதை நபர்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மது போதையில் கோவிலில் வைக்கப்பட்ட முட்டைகளை உடைத்து குடித்து உள்ளார் கேரளாவைச் சேர்ந்த போதை ஆசாமி ஒருவர்.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது வள்ளியூர் காவு கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 14 நாட்கள் நடைபெறும் பிரம்மாண்ட திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் சாமி ஊர்வலம் பிராம்மாண்ட முறையில் நடைபெறுவது வழக்கம். மேலும், இந்த திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கே நடத்தப்படுகின்றன. இந்த திருவிழாவை காண கேரளா மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.

பாம்பு புற்று

இந்த கோவிலில் அமைந்துள்ள இரண்டு பிரம்மாண்ட ஆல மரங்களுக்கு இடையே பாம்பு புற்று உள்ளது. இந்த ஆல மரங்களுக்கு இடையே முட்டைகளை வைத்துச் செல்வது இங்கு வரும் பக்தர்களின் வழக்கமாகும்.

இந்நிலையில் இந்த கோவிலுக்கு வந்த குடிமகன் ஒருவர் ஆல மரங்களுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த முட்டைகளை பார்த்ததும் அதன் அருகில் சென்று இருக்கிறார். போதையில் தள்ளாடி கொண்டிருந்த அந்த நபர் திடீரென அங்கிருந்த முட்டைகளை எடுத்து தரையில் தட்டி உடைத்து அப்படியே குடிக்க தொடங்கியிருக்கிறார்.

சாமி மன்னிச்சுக்கோ

பாம்பிற்கு படைக்கப்பட்ட முட்டைகளை குடித்து முடித்த பிறகு சாமி என்னை மன்னித்துக் கொள் என்பது போல இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்கிறார் அந்த போதை ஆசாமி.

இதனை கண்ட அங்கிருந்த சிலர் அதிர்ச்சியடைந்ததால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்குள் அந்த போதை ஆசாமி கோவிலை விட்டு வெளியேறி சென்றிருக்கிறார்.

பிரசித்திபெற்ற வள்ளியூர் காவு கோவிலில் பாம்பிற்கு வைக்கப்பட்டிருந்த முட்டையை குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் குடித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

KERALA, VALLYOORKAVU, EGG, கேரளா, வள்ளியூர்காவு, முட்டை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்