VIDEO: வரிசையாக வந்து ‘ஆசி’ வாங்கும் பக்தர்கள்.. புது வருசத்தின் ‘ஸ்டார்’ ஆன நாய்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவில் ஒன்றில் பக்தர்களுக்கு நாய் ஆசி வழங்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் சித்திவிநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாய் ஒன்று கைகுலுக்கி ஆசீர்வாதம் செய்கிறது. இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கோவிலில் கடவுளை தரிசித்து விட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இன்றி நாய் தனது கைகளை அன்போடு நீட்டுகின்றது. நாயின் செயலை கண்டு வியந்து போன பக்தர்கள் அதோடு செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்