'6 மாதமாக கணவர் செய்துவந்த குரூரம்'... 'சங்கிலியில் கட்டிவைக்கப்பட்டிருந்த மனைவியை'... 'மீட்கப்போய் அதிர்ந்துநின்ற அதிகாரிகள்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் இளம்பெண் ஒருவர் கணவரால் வீட்டிலேயே பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியின் திரிலோக்புரியில் வசித்துவரும் 32 வயது பெண் ஒருவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களாக அவருடைய கணவரால் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டு, இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவரை அடைத்து வைத்திருந்த அறையில் மின்விசிறி கூட வைக்கப்படாத நிலையில், அறை உள்ளேயே நிறைய கழிவுகள் காணப்பட்டதால் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த டெல்லி பெண்கள் ஆணையத்தினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர். மீட்க சென்றபோது அந்தப் பெண் கிழிந்த உடைகளை அணிந்து கொண்டு பரிதாப நிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள், அவர் கொடூரமாக தாக்கப்பட்டு இருந்ததால், அது அவருடைய மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளதாகத் கூறியுள்ளனர். கணவர் தன்னை கடுமையாக அடித்து சித்திரவதை செய்ததாக கூறியுள்ள அந்தப் பெண்ணுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பேசியுள்ள டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், "அந்தப் பெண்ணின் உடலில் நிறைய தழும்புகள் உள்ளது. மேலும் அவர் மனநலப் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அந்தப் பெண் இதற்கு முன்பு நல்ல உடல்நலம் மற்றும் மனநலத்துடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்