'சாம்பாரில் கிடந்த பல்லி...' 'சென்னையை சேர்ந்த பிரபல தென்னிந்திய ஹோட்டல்...' 'டெல்லி போலீசார் வழக்கு பதிவு...' - வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் இருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளருக்கு சாப்பாடு பரிமாறும் போது சாம்பாரில் பல்லியின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் எப்போதும் தென்னிந்திய உணவு வகைகளை மவுசு அதிகம். அதனை ஆர்டர் செய்து ஆசையாக சாப்பிட உட்கார்ந்த ஒருவருக்கு சாம்பாரில் பல்லி கிடந்ததை பார்த்து அதிர்ந்துள்ளார் வாடிக்கையாளர் ஒருவர்.

மத்திய டெல்லியின் கொனாட் பிளேஸில் எப்போதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஆடம்பரமான மற்றும் அப்பகுதியிலேயே பிரபலமான ஒரு உணவகம் உள்ளது. அந்த புகழ்பெற்ற உயர் தர சைவ உணவகத்திற்கு சென்று தென்னிந்திய உணவு வகைகளை ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருவருக்கு பரிமாறிய சாம்பாரில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து அதனை தன் செல்போனில் வீடியோ  எடுக்க தொடங்கியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அந்த வீடியோவில் உணவக ஊழியர்கள் அவரை தடுத்து கத்துவதும், ஹோட்டல் மேலாளர் வாடிக்கையாளரின் வீடியோவிற்கு பயந்து ஓடுவதையும் காணலாம்.

தற்போது பாதிப்படைந்த வாடிக்கையாளர் அந்த குறிப்பிட்ட உணவகம் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளார். மேலும் உணவகத்தின் இந்த செயலுக்கு ஐபிசி மற்றும் ஐபிசி 336 இன் பிரிவு 269 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் உணவக ஊழியர்கள் மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் பற்றிய விவரங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

மற்ற செய்திகள்