லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண் மாயம்.. ஃபிரிட்ஜை திறந்தபோது திகைச்சு நின்ன போலீஸ்.. ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த அடுத்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த இளம்பெண்ணை கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தலைநகர் டெல்லியையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சிங்கிள்ஸ்க்கு வணக்கம்"... வைரலாகும் அமைச்சரின் ஜாலி பதிவு.. ஆர்வமான முரட்டு சிங்கிள்ஸ்..!

டெல்லியில் லிவிங் டுகெதரில் தன்னுடன் வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்னும் இளம்பெண்ணை  கொலை செய்ததாக அஃதாப் பூனாவாலா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஷ்ரத்தாவை கொலை செய்து, அவருடைய உடலை பல பாகங்களாக வெட்டி வனப்பகுதியில் அஃதாப் வீசியதாக தகவல்கள் வெளியானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தலைநகர் டெல்லியில் இதேபோல மற்றொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

ஹரியானாவில் உள்ள ஜாஜ்ஜர் பகுதியை சேர்ந்தவர் நிக்கி யாதவ். இவர் உத்தம் நகர் பகுதியில் உள்ள கோச்சிங் சென்டருக்கு சென்றபோது சாஹில் கெலாட் என்பவருடைய அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில் வேலை கிடைத்து வெவ்வேறு இடங்களுக்கு சென்றிருக்கின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள நஜாப்கரில் சொந்தமாக உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார் சாஹில்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது வாடகைக்கு வீடு எடுத்து நிக்கி யாதவுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்திருக்கிறார் சாஹில். இதனிடையே அவருடைய வீட்டில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தெரிவித்திருக்கின்றனர். இந்த தகவலை அறிந்து நிக்கி யாதவ் மற்றும் சாஹில் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே பிப்ரவரி 9 ஆம் தேதி நிக்கி யாதவை சாஹில் கொலை செய்ததாகவும் அவருடைய உடலை தனது உணவகத்தில் இருந்த ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக பிப்ரவரி 10 ஆம் தேதி தனது வீட்டினர் பார்த்திருந்த பெண்ணை திருமணமும் செய்திருக்கிறார் சாஹில். இதனிடையே நிக்கி யாதவின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பாபா ஹரிதாஸ் நகர் போலீஸார் சாஹிலை அவரது சொந்த ஊரில் வைத்து கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாஹில் அளித்த தகவல்களை போலீசார் சரிபார்த்து வருகின்றனர்.

Also Read | "யாரோ எடிட் பண்ணிட்டாங்க".. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வச்ச பிரித்வி ஷா.. என்ன ஆச்சு?

DELHI, MAN, PARTNER, FRIDGE, ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்