நொடிப் பொழுதில், 'ஓடும் ரயிலுக்கும்'.. 'பிளாட்ஃபார்முக்கும்' இடையில் சிக்கிய வாலிபர்... 'பதற வைக்கும்' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஓடும் ரயிலுக்கும் பிளாட்ஃபார்முக்கும் இடையில் விழுந்த வாலிபரை சிஆர்பிஎஃப் வீரர் போராடி மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் கோண்டியா ரயில் நிலையத்தில், நபர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி பிளாட்ஃபார்மில் கால் வைக்கும்போது தவறிப்போய், கால் நழுவியதால் பெரும் பதற்றத்துக்குள்ளாகியிருக்கிறார். ஆனால் அவர் சுதாரிப்பதற்குள் துரதிர்ஷ்ட வசமாக, ஓடும் ரயிலுக்கும் பிளாட்ஃபார்முக்கும் இடையில் இருக்கும் அந்த இடைவெளியில் விழுந்துவிட்டார்.

பதறவைத்த இந்த தருணத்தில், அவர் அருகே ஓடிவந்த மத்திய ரிசர்வ் படைப்பிரிவு காவலர் ஒருவர், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுக்கும், பிளாட்ஃபார்முக்கும் இடையில் விழுந்த அந்த வாலிபரை மீட்க முயற்சி எடுக்கிறார். இரண்டு முயற்சிகளுக்கு பிறகு சிரமப்பட்டு மூன்றாவது முயற்சியில், அந்த வாலிபரை மத்திய ரிசர்வ் பிரிவு காவலர் மீட்டுள்ளார்.

இதனை அடுத்து அந்த வாலிபர், தன்னை காப்பாற்றிய சிஆர்பிஎஃப் வீரருக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்லியிருக்கிறார்.

TRAINACCIDENT, GONDIA, CRPFJAWAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்