'உருமாறிக் கொண்டே இருக்கும் கொரோனா!.. 2 டோஸ் தடுப்பூசி போக... 'இத' செஞ்சு தான் ஆகணும்'!.. எல்லாரும் ரெடியா இருங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுவதில் மேலும் சில மாற்றங்கள் வரப்போவதாக டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை, முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து, வைரஸ் தொற்று மெல்ல கட்டுக்குள் வருகிறது.

இந்த நிலையை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதனால், பிரிட்டன் போன்ற நாடுகள் பொதுமக்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பூஸ்டர் டோஸ் பற்றி டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா பேசும் போது, "பொதுமக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, பூஸ்டர் டோஸ் நமக்கு தேவை.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது அதனை, பூஸ்டர் டோஸ் மூலம் ஈடு செய்து கொள்ளலாம். நாட்டிலுள்ள அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்