'முதலிரவுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு...' 'திடீர்னு காதலியோட என்ட்ரி...' - கொஞ்சம் கூட எதிர்பார்க்காத காதலன் செய்த காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சித்தூர் மாவட்டம் கங்கவரம், மிட்ட மீதகுரப் பள்ளியை சேர்ந்த 25 வயதான கணேஷ் என்பவர் பெங்களுருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் சித்தூர் பெத்த பஞ்சானியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக காதல் தொடர்ந்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கணேஷுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மிட்ட மீதகுரப் பள்ளிக்கு வந்த கணேஷ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டும், சிகிச்சைக்கு பின் கொரோனாவிலிருந்து மீண்டும் உள்ளார். இதையடுத்து கணேஷின் வீட்டார் அவருக்கு பெத்தபஞ்சானி மண்டலம் அப்பனபள்ளியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர் . இதற்கு மறுப்பேதும் சொல்லாத கணேஷ் திருமணத்திற்கும் தயாராகியுள்ளார்.

இந்நிலையில் கணேஷின் நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த அவரது காதலி உடனடியாக பெங்களூருவில் இருந்து அவசரமாக மிட்டமீதகுரப் பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே கணேஷின் திருமணம் முடிந்துள்ளது.

தன்னை 6 வருடம் காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய கணேஷ் மீது கங்கவரம் மற்றும் பெத்தபஞ்சானி போலீசாருக்கு இளம்பெண் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் காதலரிடம் முறையிட அவரது வீட்டிற்கும் சென்றுள்ளார்.

ஆனால், அப்போது முதலிரவு நிகழ்ச்சியை நடத்தவிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வீட்டிற்குள் விடாமல் கணேசின் உறவினர்கள் இளம்பெண்ணை தாக்கினர். மேலும் காதலியின் வருகையை அறிந்த கணேஷ் தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து முதலிரவு அறையிலிருந்து புதுமண தம்பதியினர் முதலிரவு நடக்கவிருந்த வீட்டிலிருந்து ஓடியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மட்டுமில்லாமல் இரு வீட்டார் குடும்பத்தாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்