VIDEO: ஐயோ, மணமேடையில 'இப்படியா' நடக்கணும்...?! '12 அடி ஊஞ்சலில் ஜாலியாக 'பறந்துக்' கொண்டிருந்தபோது, திடீரென... - திருமண விழாவில் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அனைவருக்கும் திருமண நாள் அவர்களுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அது தங்களது வாழ்க்கையை மாற்றப்போகும் நாள் என்பதால் அவர்கள் சுவாரஸ்யமான நிகழ்வுகளை விழாவில் கொண்டுவருவர்.

Advertising
>
Advertising

பொதுவாக இந்திய திருமணங்கள் இப்போது காசை அதிகமாக செலவு செய்து பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம் பல விசயங்களை செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் வைரலாகும் வண்ணமாக பல கான்செப்ட்களை உருவாக்கி அதில் மணமக்கள் ஈடுபடுவதும் உண்டு.

திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் முதல் திருமணம் வரை புதுமைகள் என்ன என்று மணமக்கள் பயங்கரமாக யோசித்து கொண்டாட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றனர்.

இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் பெரும்பாலும் மகிழ்ச்சியை தந்தாலும், சில நேரங்களில் பாதகமாக முடிந்துவிடுகிறது.

அதுபோன்று சத்தீஸ்கரில் நடந்த திருமணம் ஒன்றில் விபரீதம் ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி  தங்களுடைய திருமண நிகழ்வின் போது மேடைக்கு மேலே 12 அடி உயரத்தில் வட்ட வடிவிலான ஊஞ்சல் ஒன்றில் நின்றுகொண்டிருந்தனர்.

ஊஞ்சலை சுற்றி கண்கவரும் வகையில் பட்டாசுகள் வெடிக்க, கீழே நடனக்கலைஞர்கள் நடனமாட, திருமண ஜோடி உற்சாகத்துடன் ஊஞ்சலில் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் முறிந்ததில், திருமண ஜோடி 12 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். இதனால் மேடையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் மணமகன், மணமகள் இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். ஊஞ்சலை சுற்றி பட்டாசுகள் வைக்கப்பட்டதே விபத்துக்குக்காரணம் என்று கூறப்படுகிறது.

மணமக்கள் கீழே விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

CHHATTISGARH MARRIAGE, மணமக்கள், சத்தீஸ்கர், FALL, BRIDES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்