VIDEO: 'எவ்ளோ கேவலமா பேசுறாங்க தெரியுமா...? 'கதறி அழுத சந்திரபாபு நாயுடு...' 'இனிமேல் நான் இந்த இடத்துக்கு வரணும்னா...' - கண்ணீருடன் எடுத்த சபதம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பில் அழுத வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஆந்திர மாநிலத்தின் மூன்று முறை முதல்வராக இருந்தவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. தற்போது ஆந்திராவின் ஆளும் கட்சியாக யுவஜன ஸ்ரமிஜ ருது காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்) இருக்கிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்களையும், தனிப்பட்ட ரீதியாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை ஆளும் தரப்பை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு சட்டசபைக்கு இனி அவர் திரும்பினால் அது முதல்வராக மட்டுமே வருவேன் என சூளுரைத்து வெளிநடப்பு செய்துள்ளார்.

சட்டசபையில் நடைபெற்ற இந்த காரசார விவாதம் குறித்து சந்திரபாபு நாயுடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது. உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் வருத்தத்தில் கண் கலங்கி அழுதார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. சந்திரபாபு நாயுடு அவர்களின் இந்த செயலுக்கு பல நெட்டிசன்கள் ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

CHANDRABABU NAIDU, CRY, PRESS, ANDHRA PRADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்