'அதிகாலையில் பெய்த மழை'... 'டிவைடரில் மோதி பல்டி அடித்த கார்' ... பதற வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கான மழை பெய்திருந்த சாலையில் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி பல்டி அடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் அதிக அளவு மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே அதிகமாக மழை பெய்திருந்த சாலையில் வேகமாக வந்த 'ஃபோர்டு ஈகோஸ்போர்டு' கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த டிவைடரில் மோதி பலமுறை பல்டி அடித்தது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த  சிலர் தெறித்து ஓடினார்கள்.

இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் அச்சத்துடன் நின்றிருக்க, உருக்குலைந்த காரிலிருந்து ஓட்டுநர் அசலாட்டாக வெளியே வந்தார். இதனால் விபத்தை நேரில் பார்த்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். மேலும் காரில் வேறு யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே காரை ஓட்டி வந்தவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், இந்த கோர விபத்திலிருந்து உயிர்தப்பினார். கார் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, CCTV, FORD ECOSPORT, ROLLS OVER, DRIVER, SUV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்