1500 ஜிபி டேட்டா... 200 Mbps வேகம், 'வரம்பற்ற' குரல் அழைப்புகள்... அதிரடி 'ஆபர்களால்' தெறிக்க விடும் நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாடிக்கையாளர்களை தக்கவைக்க ஒவ்வொரு நிறுவனமும் போட்டிபோட்டு ஆபர்களை வாரிவழங்கி வருகின்றன. அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூபாய் 1999-க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 200 Mbps வேகத்துடன் 1500 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகியவை 90 நாட்களுக்கு கிடைக்கும்.

தற்போது தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய 2 வட்டங்களில் மட்டும் இந்த ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 1500 ஜிபி என்கிற இந்த டேட்டா வரம்பை நீங்கள் மீறிவிட்டால் இணைய வேகமானது 2 Mbps ஆக குறைக்கப்படும், இந்த 2 Mbps வேகத்தின் கீழ் பதிவிறக்கம் செய்ய அல்லது பதிவேற்ற எந்த வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்