"கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அவரு கூட தான்".. இந்திய இளைஞரை கரம்பிடித்த பிரிட்டன் பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக உன்னதமான காதல் என்பதற்கு பணம், இனம், மதம், மொழி உள்ளிட்ட எந்த விஷயத்திற்குள்ளும் அடங்காது என சொல்லுவார்கள்.

Advertising
>
Advertising

Also Read | மாஸ்டடோன் தளத்துக்கு படையெடுத்த நெட்டிசன்கள்.. அப்படியென்ன ஸ்பெஷல் இருக்கு அதுல.?

அதனை நிரூபிக்கும் வகையில் தான் தற்போது ஒரு சம்பவம் இந்தியாவின் ஆக்ரா பகுதியில் நடைபெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் ஹன்னா ஹோவிட் (Hannah Howit). இவர் செவிலியராகவும் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த 2020 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஆக்ரா பகுதியை சேர்ந்த பாலேந்த்ரா சிங் (Palendra Singh) என்ற வாலிபருடன் ஹன்னாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பேரிடர் காலத்தின் போது பாலேந்த்ரா சிங் செய்து வந்த Podcast மீது அதிக ஆர்வம் கொண்டு அவரிடம் ஈர்க்கப்பட்டார் ஹன்னா. நாளடைவில் இருவருக்கும் இடையே காதலும் உருவாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் பின்னர் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த ஹன்னா, ஆக்ராவில் உள்ள கிராமத்தில் அமைந்திருக்கும் கோவில் ஒன்றில் வைத்து தனது காதலர் பாலேந்திராவை கரம் பிடித்தார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மணமகள் ஹன்னா, இந்திய பாரம்பரிய முறைப்படி உடை அணிந்திருந்தார். மேலும் திருமண சடங்குகள் கூட இந்திய வழக்கப்படி தான் இருந்தது. இந்த திருமணத்தின் போது மணமக்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் திருமணத்திற்கு பிறகு இந்தியாவில் வாழ வேண்டும் என்றும் ஹன்னா அதிகம் விருப்பப்பட்டு வருகிறார். இது பற்றி பேசும் ஹன்னா, ஆன்மீகத்தில் உள்ள பொதுவான ஆர்வத்தின் காரணமாக அவர்களுக்கிடையே உறவு தொடங்கியதாகவும், இந்தியரான பாலேந்த்ரா சிங்கை திருமணம் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்திற்கு அவரது பெற்றோர்கள் சம்மதம் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல தற்போது இந்தி கற்று வரும் ஹன்னா, இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பிரிட்டிஷ் பெண்ணைத் திருமணம் செய்தது குறித்து பேசும் பாலேந்த்ரா சிங், சோசியல் மீடியா மூலமாக முதலில் ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்டோம் என்றும், அடுத்தடுத்து ஆன்லைன் மூலம் பேசி வந்ததால் ஒருவருக்கொருவர் விரும்ப ஆரம்பித்தோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது காதலை ஹன்னாவிடம் வெளிப்படுத்தியதும் அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் குறிப்பிடும் பாலேந்திர சிங், சுமார் மூன்று ஆண்டுகள் ஆன்லைன் டேட்டிங்கிற்கு பிறகு தற்போது மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பாலேந்திர சிங் - ஹன்னா ஆகியோரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகிவரும் நிலையில் பலரும் இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | Emaar Tower Fire : துபாய் புர்ஜ் கலிஃபா அருகே உள்ள 35 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ!

BRITISH WOMAN, MARRIES, INDIAN YOUTH, AGRA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்