VIDEO: ஆஹா..! ‘இது வேறலெவல் என்ட்ரி’.. மாப்பிள்ளைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த கல்யாண பொண்ணு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் தமிழ் பாடல் ஒன்றிற்கு மணப்பெண் நடனமாடிக்கொண்டே மணமேடைக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தில் வருண்-அஞ்சலி ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அப்போது மாப்பிள்ளைக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென அஞ்சலி எண்ணியுள்ளார். அதனால் மணமேடைக்கு வரும்போது ‘மம்பட்டியான்’ என்ற தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மலையூரு நாட்டாம மனச காட்டு பூட்டாம’ என்னும் பாடலுக்கு நடனமாடிக்கொண்டு என்ட்ரி கொடுத்தார்.

இதனை திருமணத்துக்கு வந்திருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து மணமக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

KERALA, VIRAL, BRIDE, GROOM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்