அடுத்தடுத்து கிடைச்ச 2 சாக்குப்பை.. இந்தியாவை நடுங்க வச்ச சம்பவம்.. பொதுமக்களிடம் உதவி கேட்கும் காவல்துறை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரது உடல் இரண்டு பகுதிகளாக சாக்குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்திருக்கின்றனர். இது அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "என் உண்மையான பெயர் அது இல்ல".. இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு சொல்லிய தகவல்.. ஷாக்-ஆன நெட்டிசன்கள்..!

சாக்குப்பை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகமதாபாத்தில் உள்ள வாஸ்னா பகுதியில் குப்பைகளை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது அங்கு சாக்குப்பை ஒன்று கிடந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த ஊழியர் அந்த சாக்கு பையை பிரித்து பார்த்திருக்கிறார். அதில் ஆணின் பாதி சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கிறார். இதனால் அப்பகுதியே பரபரப்பாகியது. கொஞ்ச நேரத்தில் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், சடலத்தை மீட்டு டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இதுபற்றி பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர்,"சனிக்கிழமை, ஒரு துப்புரவு பணியாளர் சாக்குப் பையை கவனித்திருக்கிறார், அவர் உடனடியாக குடியிருப்பாளர்களை எச்சரிக்கவே, அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், எல்லிஸ்பிரிட்ஜ் காவல்துறையினரின் குழு சம்பவ இடத்திற்கு வந்து, டிஎன்ஏ விவரக்குறிப்பிற்காக சிவில் மருத்துவமனைக்கு அந்த உடலை அனுப்பியது" என்றார்.

அடுத்த விபரீதம்

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பரிமால் நகர் பகுதியில் ஒரு சாக்குப்பை கிடந்திருக்கிறது. அதனுள் மீதி உடல் இருந்ததாகவும், இறந்தவர் 40 வயது மதிக்கத்தக்க நபராக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் இரண்டு பைகளையும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரே நபர் வீசிச் சென்றிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு வண்டியின் நம்பர் பிளேட்டை கண்டறிந்த போலீசார், இதுகுறித்த ஆய்வில் இறங்கினர். ஆனால், பைகளை வீசிய உடனேயே அந்த மர்ம நபர் வண்டியை வேறு ஒருவருக்கு விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து இதுகுறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஆண் ஒருவரின் சடலம் இரண்டு சாக்குப்பைகளில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "எங்ககிட்ட அவ்வளவு காசு இல்ல சார்".. 12 வருஷமா வேதனையுடன் தவிச்ச பாகிஸ்தான் சிறுமி.. ஒரு ரூபாய் கூட வாங்காம ஆப்பரேஷன் செஞ்ச இந்திய மருத்துவர்..!

AHMEDABAD, SACK, சாக்குப்பை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்