‘40 பேர் செல்ல வேண்டிய படகில்.. இத்தனை பேரா?’.. திடீரென நடந்த எதிர்பாராத சம்பவம்!.. பலரை காணவில்லை எனவும் தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது நாவ்காச்சியா எனும் பகுதி. இப்பகுதியில் உள்ள கண்டக் நதியில் 100 பேர் கொண்ட படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சுமார் 40 பயணிகள் செல்ல வேண்டிய படகு ஒன்றில், இரண்டு மடங்கு எடையுடன், சுமார் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாவ்காச்சியா எனும் பகுதி. இப்பகுதியில் உள்ள கண்டக் நதியில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்துள்ளது.

படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இப்படகில் பயணம் செய்த 100 பேரில், இதுவரை 24 பேர் வரை காணவில்லை என்கிற அதிர்ச்சி தகவல்களும்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையின் மீட்புக்குழுவினர், மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்