“முதல் பாய்ண்டே இதுதான்!”.. கொரோனா தடுப்பூசி பற்றி பாஜக அளிக்கும் பரபரப்பு வாக்குறுதி! - வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, பாஜக அளித்துள்ள வாக்குறுதியில் கொரோனா தடுப்பூசி பற்றிய முக்கிய வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.

பீகார் மாநிலத்தில் இருக்கும் 243 பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்து, நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், முதல் வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசி இடம்பெற்றுள்ளது.

 

அதன்படி, விரைவில் கொரோனா தடுப்பூசி தயாராகி பெருமளவில் சந்தைக்கு வரவிருப்பதாகவும், பீகாரில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மக்கள் தடுப்பூசியை இலவசமாகப் பெறலாம் என்பதுதான் முதல் வாக்குறுதியாக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்