வீட்டு வாசல்ல நடந்த தகராறு.. வேடிக்கை பார்க்க போன வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீஹார் மாநிலத்தில் வீட்டு வாசலில் நடந்த தகராறை வேடிக்கை பார்க்கப்போன இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | பாட்டியின் செயினை குறிவைத்த மர்ம நபர்.. 10 வயது பேத்தி செஞ்ச தரமான சம்பவம்.. திகைச்சு போய்ட்டாங்க எல்லோரும்..!

ஆஷிஷ் குமார்

பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிஷ் குமார். இவர் அருகில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்று வந்திருக்கிறார். இவருடைய தந்தை பிரதீப் பண்டிட் நவுகாச்சியா பகுதியில் ஹார்டுவேர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆஷிஷ் குமாரின் வீட்டுக்கு முன்னர் இரைச்சல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அவர் மாடியில் இருந்து கீழே பார்த்திருக்கிறார்.

அதிர்ச்சி

உள்ளூரை சேர்ந்த கும்பல் ஒன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்த்த ஆஷிஷ், அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுக்க துவங்கியுள்ளார். சற்று நேரத்தில் கீழே நடந்துகொண்டிருந்த வாக்குவாதம் எல்லை மீறியிருக்கிறது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள அந்த பகுதி முழுவதும் பரபரப்பானது. அப்போது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும் மாடியில் நின்று கொண்டிருந்த ஆஷிக் குமார் துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்டு சரிந்து விழுந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து, ஆஷிஷ் குமாரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் அவரது சகோதரர் சச்சின். ஆனால், ஆஷிஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் அளித்திருக்கிறார்.

விசாரணை 

இதனிடையே, இந்த சம்பவம் பற்றி அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்திருக்கின்றனர். ஆஷிஷ் குமாரின் சகோதரர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை செய்த காவல்துறையின் அந்த வீடியோவை கைப்பற்றி இருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து பேசியுள்ள நவுகாச்சியா பகுதி எஸ்பி சுஷாந்த் குமார் சரோஜ், குற்றவாளிகள் சட்டத்திடமிருந்து தப்ப முடியாது எனவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தகராறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வாலிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | அடுத்த ரெக்கார்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் செஞ்ச சாதனை..!

BIHAR MAN, FIGHT, TERRACE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்