பூட்டிக் கிடந்த 'வீடு',,.. கதவ தொறந்து 'உள்ள' போய் பாத்தா,,.. 'ரத்தக்கறை'யோட ஒரு 'பாக்ஸ்',,.. திகைத்து போன மக்கள்,,.. குலை நடுங்க வைக்கும் 'கொடூரம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலம்,  கோபல்கஞ் மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ரவுர் என்னும் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் விளையாட சென்றுள்ளார்.

அங்கு சென்ற சிறுமி, வீட்டிற்கு திரும்பி வராத நிலையில், சிறுமி காணாமல் போனது தொடர்பாக அந்த கிராம மக்கள்  சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 200 மீ தொலைவிலுள்ள ஜெய்கிஷோர் ஷா என்பவரின் வீடு அன்றைய தினம் பூட்டிக் கிடந்துள்ளது.

சந்தேகத்தின் பெயரில், ஊர் மக்கள் ஷாவின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு ரத்தக்கறை படிந்த ஸ்டீல் பெட்டி ஒன்று இருந்துள்ளது. அதனைத் திறந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காணாமல் போன 9 வயது சிறுமியின் உடல், சாக்குப் பை ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட சிறுமியின் குடும்பத்தினர், கதறித் துடித்தனர்.

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்கிஷோர் ஷா, 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின் கொலை செய்து தனது வீட்டிலேயே உடலை மறைத்து வைத்து விட்டு பின் தப்பித்து சென்றது தெரிய வந்தது.

சிறுமியின் கழுத்துப் பகுதியில் காயம் இருந்ததால், ஷா சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. தற்போது தலைமறைவாகவுள்ள குற்றவாளியை போலீசார் மிகவும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்