'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரூவில் மகனுக்கு வந்த கொரியரை திறந்து பார்த்த தந்தை அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளார்.

பெங்களூரூவில் உள்ள சதாசிவ நகரை சேர்ந்த 45 வயது தொழிலதிபர் ஒருவருக்கு 9வது படிக்கும் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மகனுடைய பெயருக்கு கொரியர் ஒன்று வந்துள்ளது. மகன் விளையாடிக் கொண்டிருந்ததால் கொரியரை வாங்கிய அவர் அதைப் பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது அதில் அடர்பழுப்பு நிறத்திலான பொடி ஒன்று இருந்துள்ளது. அதைப் பார்த்து சந்தேகமடைந்த அவர் அதைப் புகைப்படமாக எடுத்து அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி விசாரித்ததில், அது கஞ்சா பொடி என்பது தெரியவந்துள்ளது.

அதையறிந்து அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவர், உடனடியாக அந்த பார்சல் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய முயன்றுள்ளார். அது முடியாமல் போகவே அவர் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பின்னர் விசாரணையில் அந்த பார்சல் எம்ஜி ரோட்டிலிருந்து தீரஜ் குமார் என்பவரால் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தற்போது அவரை டிராக் செய்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்