என் மனைவியா இப்படி? அரசல்புரசலாக வந்த தகவல், நண்பர்களோடு ஸ்கெட்ச் போட்டு கணவன் செய்த கொடுரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு: இளம்பெண் ஒருவர் தன் கணவராலும், நண்பராலும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அர்ச்சனா ரெட்டி என்னும் பெண் கர்நாடக மாநிலம் ஆனைகல் அருகே உள்ள ஜிகினி கிராமத்தைச் சேர்ந்தவர். கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அர்ச்சனா இரண்டு வருடங்களுக்கு முன் தன் முதல் கணவரை நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்துள்ளார்.

இரண்டாவது திருமணம்:

ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையான அர்ச்சனா மீண்டும் பணக்காரரான நவீன் என்பவரையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளர். திருமணம் ஆன முதலில் எந்தவித பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சந்தேகம்:

அர்ச்சனாவின் மீது சந்தேகம் கொண்ட கணவர் நவீன், மனைவியிடம் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். அதோடு, இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் அர்ச்சனா அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவருடன் அர்ச்சனா ரெட்டி கள்ளத்தொடர்பில் இருந்ததாக அக்கம்பக்கத்தில் அரசல்புரசலாக பேசப்பட்டது.

இதன் காரணமாக நவீனுக்கும் அர்ச்சனாவிற்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. மேலும் சொத்து பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அர்ச்சனா ரெட்டி தனக்கு சொந்தமான காரில் ஆனைக்கல் அருகே உள்ள தனது சொந்த ஊரான ஜிகினி வந்துள்ளார்.

படுகொலை:

இந்நிலையில் அர்ச்சனா நேற்று இரவு அவரட்டு காரில் தனது வீட்டுக்கு திரும்பும்போது பெங்களூரு ஓசூர் சாலை எலக்ட்ரானிக் சிட்டி அருகே காரை வழிமறித்த நவீன் மற்றும் நண்பர்கள் அர்ச்சனா ரெட்டியை காரிலிருந்து கீழே இறக்கி பட்டா கத்திகளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த அர்ச்சனா ரெட்டி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சாலையில் பயணம் செய்த ஒரு சில வாகன ஓட்டிகள் இதைக்கண்டு எலக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் வலைவீச்சு:

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அர்ச்சனா ரெட்டி உடலை கைப்பற்றி ஆனைக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுக்குறித்து அர்ச்சனா ரெட்டியின் மகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீன் அவரது நண்பர் சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் ஒருவரை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BANGALORE, WIFE, HUSBAND, KILLED, FRIEND, இளம்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்