திருட வந்த வீட்டில்.. சொகுசா இருந்த திருடன்.. இரண்டு நாள் கழிச்சு.. அதே வீட்டில் நடந்த துயரம்.. பூஜை அறையில் திக் திக்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுற்றுலா சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய தம்பதிக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | திடீர்ன்னு முடங்கிய வாட்ஸ்அப்.. அவதிப்பட்ட மக்கள்.. நடுவுல சிங்கிள்ஸ் பத்தி பறந்த மீம்ஸ்கள்!!

பெங்களூர் அருகே உள்ள இந்திராநகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் சுமந்த் ராய். இவர் தனது மனைவியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, விடுமுறையை முடித்து விட்டு ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி ஆகியோர், வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது சாவி எடுத்து தங்களின் வீட்டை திறந்து பார்த்தபோது கதவு திறக்கவில்லை என கூறப்படுகிறது. அதே வேளையில் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதன் பின்னர் வீட்டின் பின்புற வழியாக போய் சென்று பார்த்த போது அங்கேயும் உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஏதோ வழக்கம் போல இல்லை என்பதை உணர்ந்த ஸ்ரீதர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதர் வீட்டிற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை எடுத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கே உள்ள பூஜை அறையும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்து குழம்பி போயுள்ளனர் போலீசார்.

தொடர்ந்து அந்த கதவையும் உடைத்து உள்ளே பார்த்தபோது போலீசார், ஸ்ரீதர் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. இதற்குக் காரணம் அங்கே நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருந்தது தான். தொடர்ந்து நபரின் உடல் மீட்கப்பட்டு இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் குறித்து அறிய போலீசார் முயன்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அந்த நபர் அந்த வீட்டிற்குள் நுழைந்தது சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரிய வரும் நிலையில், தங்கம், பணம் உள்ளிட்ட பொருட்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அந்த வீட்டிலேயே அந்த நபர் குளித்தும், உணவுகளை அருந்தி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அப்படி இருக்கையில் அந்த வீட்டிற்குள் அந்த மர்ம நம்பர் நுழைந்து இரண்டு நாட்களுக்குள் அதே வீட்டின் பூஜை அறையில் உயிரிழந்து கிடந்தது மர்மமாகவே உள்ளது.

பின்னர் அந்த நபர் யார் என்பது பற்றி நடந்த விசாரணையில், அசாம் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் மீது சில திருட்டு வழக்குகளும் இன்னும் சில திருட்டு வழக்குகளில் அந்த நபருக்கு தொடர்பு உள்ளதும் உறுதியானது.

ஸ்ரீதர் வீட்டில் திலீப் குமார் திருட வந்ததற்கான தடயங்கள் உள்ளிட்ட விஷயங்கள் கிடைத்த போது அந்த நபர் எப்படி உயிரிழந்தர் என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணையிலும் போலீசார் இறங்கி உள்ளனர். அதே போல, வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also Read | கணவர் மற்றும் காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் பெண்.. காரணம் இது தான்!!

BENGALURU, COUPLE, HOLIDAYS, THIEF, HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்