'அந்தரத்தில் முன் வீல்'.. 'சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்'!.. 'அசுர' வேகத்தால் 'நொடியில்' நடந்த 'பதைபதைப்பு' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாகசப் பயணத்தில் ஈடுபட்ட 3 பேர் கோர விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநில இளங்கா சாலையில் 2 இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்கள், சினிமா பாணியில் இருசக்கர வாகனத்தின் முன் பக்க சக்கரத்தை அந்தரத்தில் உயர்த்தி,  அதிவேகமாக வீலிங் செய்து சென்றுகொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவ்வழியே விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் வந்த ஒருவர் மீது, இந்த இளைஞர்களின் பைக் கட்டுப்பாட்டை மீறி மோதியதில் எதிரே வந்தவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த கோர விபத்து சம்பவத்தில், 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்