மீண்டும் 'பஸ்ஸில்' ஒரு சம்பவம் ... 'அலறிய' போதும் யாரும் உதவவில்லை... 'விடாமல்' விரட்டி பிடித்த போலீஸ்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் சனிக்கிழமை 28 வயது பெண் ஒருவர் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹவுரா மாவட்டத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் வேலைக்காக தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் பேருந்தில் இருந்து இறங்கவிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் அவரை முறையற்ற முறையில் தொட்டார். உடனே அவர் அலறி சத்தம் போட்டபோதும் யாரும் உதவிக்கு வரவில்லை, அதற்கு பதிலாக அவர் பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர் அழுதுகொண்டே இறங்கினார். 

இந்த சம்பவம் போக்குவரத்து காவல்துறை ஊழியர்களால் கவனிக்கப்பட்டது, அவர் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர், ஓடத் தொடங்கிய குற்றவாளியைக் கண்டு, கடமையில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் குற்றவாளியை துரத்திச் சென்று,  பிடித்து பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டு புகார் அளித்தார்.

சனிக்கிழமை காலை 10 மணியளவில், பார்க் ஸ்ட்ரீட் மற்றும் ஜே.எல். நேரு சாலையைக் கடக்கும் இடத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர் தகாத முறையில் தன்னைத் தொட்டதாக புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து போலீசாரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து குற்றவாளியை கைது செய்திருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர்கூறினார்.

BUS, MOLESTATION, WEST BENGAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்