“யானை மேல யோகாசனம்!”.. ‘யோகா குரு’ பாபா ராம்தேவுக்கு ‘நொடியில்’ நடந்த விபரீத சம்பவம்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

யானையின் மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்த போது, பாபா ராம்தேவ் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் பாபா ராம்தேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் குர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரபல யோகாசன பயிற்சிக்கு புகழ்பெற்றவரான பாபா ராம்தேவ் கலந்து கொண்டார்.

இதன் பொருட்டு அங்கிருந்த யானை மீது ஏறி அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினார், பாபா ராம்தேவ். அப்போது திடீரென நிலைதடுமாறி யானையில் இருந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்