போலீஸ் அதிகாரியா அப்பாவுக்கு சல்யூட் வச்ச மகள்.. பெருமையோடு அப்பா பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காவல்துறை அதிகாரியாக தேர்வான மகள், மூத்த போலீஸ் அதிகாரியான தனது தந்தைக்கு சல்யூட் வைக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி.. கடும் பனியால் நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. வாட்சப் மூலமாக டாக்டர் நிகழ்த்திய அற்புதம்.. நிஜமான ஆல் இஸ் வெல் சம்பவம்...!

பெற்றோர்களை பொறுத்தவரையில் தங்களுக்கு பிள்ளைகளின் எதிர்காலம் மீது அவர்களுக்கு பல கனவுகள் இருக்கும். சின்னஞ்சிறிய முடிவுகளில் துவங்கி, அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்பது வரை பெற்றோர்கள் தொடர்ந்து சிந்தித்தபடியும் செயல்பட்டுக் கொண்டும் இருப்பார்கள். தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையில் கிடைக்கும் சிறிய வெற்றியும் அவர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும். அதுவே வாழ்நாள் முழுவதும் எதற்காக ஆசைப்பட்டோமோ அது நிறைவேறும் சமயத்தில் பெற்றோர்களிடத்தில் அளவில்லா மகிழ்ச்சி குடிகொள்ளும். அப்படியான நெகிழ்ச்சி சம்பவம் தான் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவருடைய வாழ்விலும் நடந்திருக்கிறது.

அசாம் மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் ஞானேந்திர பிரதாப் சிங். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியை நிறைவு செய்யும் தன்னுடைய மகள் தனக்கு சல்யூட் வைப்பதை பெருமையுடன் பகிர்ந்து இருக்கிறார் பிரதாப் சிங். இவருடைய மகள் ஐஸ்வர்யா சிங் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி அடைந்து பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

பயிற்சி முடிவடைந்த நிலையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பு விருந்தினராக டிஜிபி ஞானேந்திர பிரதாப் சிங் சென்றிருக்கிறார். அப்போது தனது தந்தைக்கு ஐஸ்வர்யா சிங் சல்யூட் வைக்க அவரும் பெருமையுடன் சல்யூட் செய்து இருக்கிறார். இது பற்றி பிரதாப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்," என்னிடத்தில் வார்த்தைகளே இல்லை. சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் இருந்து பயிற்சியை முடித்த எனது மகளிடம் இருந்து சல்யூட்டை பெற்றுக்கொண்டேன்" என நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ பலரும் ஐஸ்வர்யா சிங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 1, 2023 ஆம் தேதி ஞானேந்திர பிரதாப் சிங் அசாம் மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனராக பதவியேற்றிருந்தார். தற்போதைய சூழ்நிலையில் அவருடைய மகள் ஐஸ்வர்யா சிங்கும் ஐபிஎஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | என்னை விட்டு போகாத.. மணப்பெண்ணின் சேலையை பிடித்து போராடிய பாசமான நாய்.. நெகிழ்ச்சி வீடியோ..!

ASSAM, POLICE, ASSAM POLICE DGP, DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்