கையில் பையுடன் வந்த பெண்.. பைக்குள்ள இருந்தத பார்த்து வெலவெலத்து போன போலீஸ்!.. பரபரப்பு சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரேணிகுண்டா : கணவரைக் கொலை செய்து விட்டு, அவரின் தலையுடன் போலீஸ் நிலையம் சென்ற பெண் பற்றிய செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ரேணிகுண்டா என்னும் பகுதி. இந்த பகுதியில், வாழ்ந்து வந்த பெண் ஒருவர், 53 வயதாகும் தன்னுடைய கணவரைக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், தனது கணவரைக் கொலை செய்த பிறகு, அவரின் தலையைத் தனியாக எடுத்துக் கொண்டுள்ளார் அந்த பெண்.

அதிர்ந்த போலீஸ்

மேலும், பை ஒன்றில், அதனை போட்டுக் கொண்ட படியே நேராக காவல் நிலையம் நடந்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தனது கணவரைக் கொலை செய்தது பற்றி, போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார். கணவரின் தலையுடன் வந்த பெண்ணால் அதிர்ந்து போன போலீஸ், நேராக அவரது வீட்டிற்கு சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணை

அவர்களுக்கு, 20 வயதில் சற்று மனநிலை சரியில்லாத மகன் ஒருவரும் உள்ளதாக கூறப்படுகிறது. அவரின் வீட்டிற்கு சென்ற போலீசார், கொலை நடந்த பகுதி மற்றும் அந்த பகுதியினை சோதனை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த பெண்ணின் கணவர், பிளாஸ்டிக் பாக்ஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி தகவல்கள்

மேலும், கடந்த சில வருடங்களாக, இந்த தம்பதியர் ரேணிகுண்டா பகுதியில் வசித்து வந்த நிலையில், 30 ஆண்டு கால திருமண வாழ்க்கை சிறப்பாக தான் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தன்னுடைய கணவர் திடீரென தன்னை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளதாகவும், வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததை அறிந்து, மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது பற்றி, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனைவியின் முடிவு

இந்நிலையில் தான், இன்று இந்த வாக்குவாதம் முற்றி வந்த சமயத்தில், தனது கணவரின் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தான், கோபத்தில் உச்சத்தில் இருந்த மனைவி, கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறது.

தொடர்ந்து, அந்த பெண்ணிடமும் மகனிடமும், போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், அந்த பெண் சரிவர பேசினால் மட்டுமே முழு விவரமும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கணவரின் தலையுடன், போலீஸ் நிலையம் செல்ல முயன்ற மனைவியின் செயல், அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ANDHRA PRADESH, RENIGUNTA, WIFE, HUSBAND, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்