11 வருடங்களாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்த கணவன்.. நீதிமன்ற உதவியுடன் மீட்ட போலீஸ்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் பூட்டி வைக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்ணை நீதிமன்ற உத்தரவுடன் காவல்துறையினர் மீட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் பல்லக்கில் இருந்து திருடப்பட்ட வெள்ளி தகடுகள்.. ஒருவர் கைது..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்தவர் சாய் சுப்ரியா. இவருக்கும் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தைச் சேர்ந்த மதுசூதனன் என்பவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அனுமதி மறுப்பு

குழந்தைகள் பிறந்த பின்னர் மதுசூதனன் தனது மனைவியை சாய் சுப்ரியாவிடம் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து வெளி உலகத்துடன் அவருக்கு இருந்த தொடர்புகளை அவர் நிறுத்தியதாகவும் தெரிகிறது. மேலும் தனது மனைவியை இருட்டு அறைக்குள் அவர் அடைத்து வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே தங்களது மகளைத் தேடி சாய் சுப்ரியாவின் பெற்றோர் மதுசூதனின் வீட்டிற்கு சென்று இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மதுசூதனன் மறுத்ததாக தெரிகிறது. இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு சாய் சுப்பரியா திஷா காவல் நிலையத்தில் தனது கணவர் குறித்து புகார் அளித்திருக்கிறார். அப்போது மதுசூதனன் சமாதானமாக செல்ல இருப்பதாக தெரிவித்ததை எடுத்து தனது புகாரை அவர் வாபஸ் வாங்கியிருக்கிறார்.

புகார்

இருப்பினும், அதற்கு பின்னரும் சாய் சுப்ரியாவிடம் பேச தங்களை அனுமதிக்கவில்லை என தெரிவித்திருக்கின்றனர் அவரது பெற்றோர். இதனால் மனமுடைந்த அவர்கள் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றனர். அப்போது, மதுசூதனன் வீட்டிற்கு காவல்துறையினர் விசாரணைக்காக சென்றிருக்கின்றனர். அவர்களை வீட்டுக்குள் வரவிடாமல் மதுசூதனன் தடுத்தாகவும், நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிப்பேன் என அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

நீதிமன்ற உத்தரவு

இதையடுத்து, நீதிமன்றத்தில் சர்ச் வாரண்ட் பெற்றுக்கொண்டு மதுசூதனன் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது, அவரது வீட்டுக்குள் இருந்த இருட்டான அறையில் தனிமையில் இருந்த சாய் சுப்ரியாவை காவல்துறையினர் மீட்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | அமேசான் மழைக்காட்டிற்குள் காட்டிற்குள் தொலைந்துபோன வாலிபர் 31 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு.. திகில் பின்னணி..!

ANDHRA PRADESH, MAN, WIFE, LOCK, DARK ROOM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்