'75000 கோடி முதலீடு'... 'முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு அடித்த ஜாக்பாட்'... வெளியான தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு நிறுவனங்களுக்கு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி என இரண்டு நிறுவனங்களுக்கு அவர் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் இயக்குனராகவும் ஆனந்த் இயங்கி வருகிறார். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நியூ எனர்ஜி தொழிலில் சுமார் 75000 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.

இதனை முகேஷ் அம்பானி உறுதியும் செய்துள்ளார். அது சார்ந்த உற்பத்தி பணிகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னெடுக்க உள்ளது.

மற்ற செய்திகள்