ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனாவா?.. அமிதாப், அபிஷேக் பச்சன்களைத் அடுத்து, வெளியான 'பரபரப்பு' பரிசோதனை முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்களே தங்களது ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டனர்.  மேலும், அமிதாப் பச்சனின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவுக்காக காத்திருப்பதாகவும், தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியும், அமிதாப்-ஜெயா பச்சன் தம்பதியின் மருமகளுமான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் பச்சன் தம்பதியரின் மகளான ஆராத்யாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்