‘191 பயணிகளுடன் கோழிக்கோட்டில் விழுந்த ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம்!’.. ‘இரண்டாக பிளந்து கோர விபத்து!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரிப்பூர் விமான நிலையத்தில் இரவு 8.15 மணிக்கு துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் ஊழியர்கள், பயணிகள் உட்பட 191 பேர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானிக்கு என்னாயிற்று என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்