'மாமியார் கூட நடந்த சண்டையில...' 'தாம்பத்ய உறவில் மனைவி எடுத்த சபதம்...' - சுக்குநூறாக நொறுங்கி போன கணவனின் விபரீத முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அகமதாபாத்தில் தன் மனைவி தாம்பத்திய உறவிற்கு அனுமதிக்காததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அகமதாபாத் சரஸ்பூரில் இரயில்வே துறையில் பணிபுரிந்து வருபவர் 32 வயதான சுரேந்திரசிங். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கு முன்பே 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்து விவாகரத்து ஆனதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மணமுடித்த கீதாவிற்கும் இது மூன்றாவது மறுமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து திருமணம் ஆகி மாமியாருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இனி கணவருடன் ஒரே மெத்தையில் உறங்க மாட்டேன் என சபதம் செய்துள்ளார் கீதா. கடந்த 22 மாதங்களாக கணவன் மனைவியும் எந்த வித தாம்பத்திய உறவும் இல்லை எனவும், இருவரும் வெவ்வேறு படுக்கையில் தான் உறங்குவர் எனவும் சுரேந்திரசிங்கின் தாய் முலி பர்மர் குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே இருவருக்கும் அடிக்கடி  சண்டை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கீதா கோபித்துக்கொண்டு கடந்த ஜூலை மாதம் தன் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேந்திரசிங் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

கணவரின் உயிரிழப்பை அறிந்த கீதா சுரேந்திரசிங் இறுதி சடங்கிற்கு வந்த போது பெரும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சுரேந்திர சிங்கின் தாய் போலீஸை அணுகி தன் மகனின் தற்கொலைக்கு காரணம் கீதா என மருமகள் மீது புகார் அளித்தார். இதையடுத்து கீதாவை தற்கொலைக்கு தூண்டியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்