‘40 பேருடன்’ கிளம்பிய அரசுப் பேருந்து... ‘பனிமூட்டத்தில்’ முன்னே நின்ற ‘லாரி’.. ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பனிமூட்டம் காரணமாக அரசுப் பேருந்து சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிலிருந்து 40 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று லக்னோ நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளது.  சிக்ராரா எனும் இடத்திலுள்ள வளைவு ஒன்றில் திரும்பும்போது சாலைத் தடுப்பில் மோதிய பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிமூட்டத்தால் சாலையில் பஞ்சராகி நின்றுகொண்டிந்த லாரி தெளிவாகத் தெரியாத நிலையில், அதன் அருகில் சென்றதும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்