“இண்டஸ்ட்ரிக்கே இவர்கிட்ட இருந்துதான் சப்ளை!”.. கைதான நடிகை, நடிகையரிடம் விசாரணை.. வெளியான அதிர்ச்சி உண்மைகள்.. சிக்கிய கடத்தல் மன்னன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கன்னட திரையுலகிற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக, ஆப்பிரிக்க கடத்தல் மன்னன் பெனால்ட் உடேனா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் கன்னட திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி உட்பட 12க்கும் மேற்பட்டோர் அண்மையில் போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம், ஆப்பிரிக்க கடத்தல் மன்னன் பெனால்ட் உடேனா, 3 வெவ்வேறு போலியான பெயர்களில் நடிகை, நடிகையருக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 12 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்