'இங்க தான் இருந்துச்சு’... ‘பூங்காவில் இருந்து திடீரென மாயமான புலி’... ‘அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்’...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூங்கா ஒன்றில், காணாமல் போன 9 வயது புலி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டு, மீண்டும் மாயமாகி இருப்பது, பூங்கா ஊழியர்கள் மற்றும் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
வயநாட்டில் இருந்து நெய்யார் லயன் சஃபாரி பூங்காவுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட 9 வயது புலி ஒன்று, பிரத்யேக கூண்டில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மதியம், கூண்டில் இருந்த கம்பியை வளைத்து, அந்தப் புலி தப்பியது தெரியவந்ததால், பூங்கா ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் பூங்கா அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணிநேரத்திற்குப் பின்னர், அந்தப் புலி பூங்காவின் உள்ளே ஓர் இடத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் சில மணிநேரத்தில் அந்தப் புலி மாயமானது. அடர்ந்த மரங்கள் நிறைந்த பூங்கா என்பதால், புலியை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில், பல குழுக்களாக அதிகாரிகள் பிரிந்து தேடுவதுடன், டிரோன் மூலமும் புலியை தேடி வருகின்றனர்.
புலி மாயமானதால், பூங்கா அருகில் வசித்து வரும் மக்கள் குடியிருப்பு பகுதிக்கும் நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். எனினும் பூங்காவை விட்டு புலி வெளியேற வாய்ப்பில்லை என்றும், பூங்காவின் உள்ளே தான் எங்கேயாவது ஒளிந்து இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவளோட பேச்சுல மயங்கிட்டேன்'... 'தனியாக சந்திக்க அழைத்ததும் எதுவும் யோசிக்காமல் சென்ற இளைஞர்'... வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு நடந்த சம்பவம்!
- 'புயலை விட மோசமாக மும்பை.. பெங்களூரு என இப்போது கேரளா வரை டிராவல் ஆகும் போதைப்பொருள் சப்ளை விவகாரம்!'.. அதிர்ச்சி தரும் உண்மைகள்.. அடுத்து நடக்கவுள்ள திருப்பங்கள்!
- 'எனக்கு வந்த திருமண வரனை தடுத்தது அந்த ஆளு தான்'... 'பக்கத்து வீட்டுகாரர் மீது செம காண்டான 90ஸ் கிட்'... ஆத்திரத்தில் செய்த பகீர் சம்பவம்!
- பாயாசம் சாப்பிட்டு... பக்தி பாடலுக்கு அடிமையான முதலை!.. சன்னிதானத்தில் வந்து சுவாமியை தரிசித்த போது நடந்த அதிசயம்!
- 'எந்த அனுபவமும் இல்ல!'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு!'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு!
- 'விரக்தியில் லாட்டரி சீட்டை கிழித்து எறிந்த ஆட்டோ டிரைவர்'... 'ஆனா இப்படி ஒரு ட்விஸ்ட் நடக்கும்ன்னு யாரும் நினைக்கல'... பரபரப்பு சம்பவம்!
- “அப்போ.. புரிதல் இல்லை.. இயக்குநர் வற்புறுத்தினாரு”.. இணையத்தில் பரவும் தனது ஆபாச காட்சி.. இப்போது சட்டக் கல்லூரி மாணவியாக இருக்கும் நடிகை பரபரப்பு புகார்!
- VIDEO: ஆதரவு கொடுக்கவேண்டிய ‘நீங்களே’ இப்டி செஞ்சா.. இனி ‘யாருகிட்ட’ போய் சொல்றது.. மனதை உலுக்கிய ‘கண்ணீர்’ வீடியோ..!
- 'வைரலான ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட்'... 'அர்ச்சனை செய்த நெட்டிசன்கள்'... 'இந்த கேள்வி எல்லாமா கேப்பீங்க'... தம்பதியர் சொன்ன பஞ்ச் பதில்!
- 'இந்த பூனையோட ஆக்டிவிடீஸ் எதுவும் சரி இல்லையே...' 'ஆத்தி, இது அது இல்ல...' 'குறுகுறுன்னு பாக்றப்போவே டவுட் ஆச்சு...' - அதிர்ச்சியில் உறைந்த தம்பதி...!