‘திடீர் பனிச்சரிவு’.. 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலி..! மீட்பு பணி தீவிரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மாச்சில்செக்டர் பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கியுள்ள மற்ற ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் காந்தர்பால் மாவட்டம் சன்மார்க் பகுதியில் நேற்று ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 9 பொதுமக்கள் சிக்கினர். அதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

JAMMUANDKASHMIR, INDIANARMY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்