'திருமணத்திற்கு' சென்று திரும்பியபோது... திடீரென 'பல்டியடித்த' டிராக்டர்... அடுத்து நடந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய போது டிராக்டர் திடீரென கவிழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஹூவினகடஹள்ளி அருகேயுள்ள கோலலு கிராமத்தில் நேற்று மாலை டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த டிராக்டர் சாலையில் பல்டியடித்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றினர். விசாரணையில் அவர்கள் அனைவரும் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்