Video: 'பட்டப்பகலில்' பொதுமக்களை விரட்டி... சராமரியாகத் 'தாக்கிய' புலி... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பட்டப்பகலில் டிராக்டரில் சென்ற பொதுமக்களை புலி தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜிரவ்லா என்ற இடத்தில் ஊருக்குள் புகுந்த புலி பொதுமக்களை கடித்து காயப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. லால்பூரைச் சேர்ந்த ராம் பகதூர், லல்தா பிரசாத்,ஜாரி ஆகிய 3 பேரும் கிராமத்தை ஒட்டிய சாலையில் தங்கள் பணிக்கு இருசக்கரவாகனம் மற்றும் டிராக்டரில் சென்றனர். ஷிவ்நகர் சாலையில் சென்றபோது திடீரென வழிமறித்த புலி டிராக்டர் மீதேறி அவர்களை சரமாரியாக தாக்க ஆரம்பித்தது.

இதைக்கண்ட அவர்கள் புலியிடம் இருந்து தப்பிக்க பதில் தாக்குதல் நடத்தினர். எனினும் புலி தாக்கியதில் மூவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதைக்கண்ட பலரும் தங்கள் மொபைலில் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்