“கேளிக்கை விடுதியில் ஆபாச நடனம்!”.. பாதியில் நிறுத்தி 21 இளம் பெண்களை அழைத்துச் சென்ற போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கிளப் ஒன்றில் இளம் பெண்கள் ஆபாச நடனத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, போலீஸார் அங்கு விரைந்தனர்.

அங்கு சென்றதும் போலீஸார் நடனத்தை பாதியில் நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு நடனமாடிக் கொண்டிருந்த 21 பெண்களை விசாரணைக்காக கைது செய்து ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாத் என்பவர் கேளிக்கை விருந்து ஒன்றுக்காக பிரசாத் என்பவர் தங்களை நடனமாட அழைத்து வந்ததாகவும், பிரசாத் அந்த கேளிக்கை விடுதியை ஒரு நாளைக்காக வாடகைக்கு எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் போலீஸார் வரும் முன்னரே பிரசாத்தும், கிளப் உரிமையாளரும் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்கள் மட்டும் போலீஸாரால் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

TELANGANA, HYDERABAD, GIRLS, DANCE, PUB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்