'கோயிலுக்கு' சென்று விட்டு திரும்பியபோது நடந்த கோரம்... குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு... 11 பேர் படுகாயம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிராக்டர் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியை சேர்ந்த 26 பேர் டிராக்டர் ஒன்றில் ஆந்திரா மாநிலம் வேதாத்திரி பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ம கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பினர். கிருஷ்ணா மாவட்டம் ஜக்கையன்பேட்டை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் 8 பெண்கள் உட்பட 12 பேர் மரணம் அடைந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஜக்கையன்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த தெலுங்கானா முதல்வர் அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய ஆறுதல் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்