நடப்பு 'ஆண்டை' விட 30% அதிகம்... 'பிரபல' கம்பெனியால்... ஐடி ஊழியர்களுக்கு 'அடித்த' ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பொருளாதார மந்தநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பல்வேறு அவதிகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இந்தநிலையில் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனம் நடப்பு ஆண்டை விட 30% ஊழியர்களை அதிகமாக பணியில் அமர்த்தவுள்ளதாக தெரிவித்து உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 39000 ஊழியர்களை புதிதாக அந்நிறுவனம் பணியில் அமர்த்த திட்டமிட்டு இருக்கிறது.

சமீபத்தில் டிசிஎஸ் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த டிசம்பர் காலாண்டில் நிகரலாபம் 0.20% அதிகரித்து, 8,118 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 8,105 கோடி ரூபாயாக இருந்தது. லாபம் அதிகமாக இல்லாத நிலையிலும் டிசிஎஸ் வேலைவாய்ப்பினை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்