‘அமேசான் ஃப்ளிப்கார்ட்-ஐ அடுத்து...’ ‘இ-பார்மசியில் இறங்கிய ரிலையன்ஸ்...’ - நெட்மெட்ஸிடம் 60% ஷேர் கொடுத்து வாங்கிருக்காங்க...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா ஊரடங்கினால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மக்கள், ஆன்லைன் மூலம் மருந்துகளை ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளதால் இ-பார்மசி நிறுவனங்களின் தேவையும் அதன் வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் சென்னையைச் சேர்ந்த நெட்மெட்ஸ்மற்றும் அதன் துணை நிறுவனங்களின் 60% பங்குகளை சுமார் 620 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. நெட்மெட்சின் 60% பங்குகளையும் அதன் துணை நிறுவனங்களான ட்ரெசாரா ஹெல்த் பிரைவேட் லிமிடெட், நெட்மெட்ஸ் மார்க்கெட் பிளேஸ் லிமிடெட் மற்றும் தாதா பார்மா டிஸ்டிரிபியூஷன் பிரைவேட் லிமிடெடின் 100% பங்குகளையும் வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்சின் இயக்குநர் ஈஷா அம்பானி இது பற்றி கூறுகையில் ``மருந்து சேவைகளைக் கணினி மயமாக்கி,மக்களுக்கு மலிவான விலையில் மிகவும் தரமான மருந்துகளை விநியோகம் செய்யவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்,
அமேசான் இந்தியா, இ-பார்மசி சேவையை பெங்களூரில் அறிமுகப்படுத்திதையடுத்து, ரிலையன்ஸும் தற்போது இ-பார்மசி துறையில் முதலீட்டில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோமார்ட் என்ற ஆன்லைன் மளிகைச் சேவையை மே மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

நெட்மெட்ஸ் நிறுவனத்தின் மூலம் மருத்துவர் முன்பதிவு, நோய் கண்டறிதல் மற்றும் மருந்து விநியோக சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த சில மாதங்களாகத் தனது ஜியோ பிளாட்ஃபார்ம்களுக்காக சுமார் 20 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்