"கொரோனா மொத்தமா செஞ்சு விட்டுருச்சு"... எங்களுக்கும் வேற வழி தெரியல 'மக்களே' - 'ஊழியர்'களை கொத்தாக வீட்டுக்கு அனுப்பிய பிரபல 'நிறுவனம்'!!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தொற்று காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் சூழ்நிலையில், பிரபல பிரௌசரான மொஸில்லா நிறுவனமும் மறுசீரமைப்பை அறிவித்துள்ள நிலையில், இதன் காரணமாக 250 ஊழியர்கள் வரை வேலையிழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஆரம்பத்தில் 70 பேரை பணிநீக்கம் செய்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

'கொரோனா தொற்றுக்கு முன்பாக இந்தாண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து சிறந்த மாற்றங்கள் மற்றும் புதுமையான திட்டங்களை உருவாக்க நினைத்திருந்தோம். ஆனால் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக மாறிவிட்டது. இதனால் 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்து பணியாளர்களின் அளவைக் குறைத்து எண்களின் வளர்ச்சிக்கு திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளோம். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அவர்களின் முழு அடிப்படை ஊதியத்திற்கு சமமான பிரிவினைகளைப் பெறுவார்கள், மேலும் ஆண்டின் முதல் பாதியில் அவர்களின் தனிப்பட்ட செயல்திறன் போனஸையும், அத்துடன் தங்கள் நிறுவனத்தின் போனஸ் மற்றும் நிலையான கோப்ரா சுகாதார காப்பீட்டையும் பெறுவார்கள்' என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்