தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி...? 'இதுக்கு பெரிய தொகைலாம் தேவையில்ல...' - வருசத்துக்கு எவ்ளோ வருமானம் கிடைக்கும்...?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகில் என்ன நடந்தாலும் சரி என் ரூட்டில் நான் போவேன் என தங்கத்தின் விலை அதன் உச்சத்திற்கு சென்றுக் கொண்டே உள்ளது. அதுவும் இந்தியாவில் தங்கத்திற்கு இருக்கும் மவுசு உலகறிந்தது.

ஜொலிஜொலிக்கும் தங்கத்தை இந்திய முதலீட்டாளர்களால் ஒதுக்கவோ, ஓரம் கட்டவோ முடியாது. மேலும் இந்திய பெண்கள் தங்கத்தை இறைவனுடம் ஒப்பிட்டு ஒரு உணர்வு பூர்வமான தொடர்பு உருவாக்கிக் கொள்கின்றனர். ஒரு சிலருக்கு தன் அந்தஸ்தே அந்த தங்க நகையில் தான் உள்ளது போல எண்ணுவர். அப்படிப்பட்ட தங்கத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பதே இன்று பலரின் கேள்வியாக உள்ளது.

ரிசர்வ் வங்கி தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு மாற்றாக தங்கப் பத்திரங்களை விநியோகித்து வருகிறது. மேலும் இந்த தங்கத்தின் கிராம் அடிப்படையில் இப்பத்திரங்கள் வழங்கப்படுகிறது. தங்கத்தை சேமித்து வைக்க கூடுதல் செலவுகள் தேவையில்லை என்பதால் முதலீட்டாளர்கள் இம்மாதிரியான தங்கப் பத்திரங்களை வாங்க விரும்புகின்றனர்.

மேலும் இந்த முதலீட்டில் அதிகபட்சமாக ஓராண்டுக்கு 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் நேரடியாக வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படும். இந்த முதலீட்டில் ஈடுபட குறைந்தது ஒரு கிராம் தங்கத்திற்காவது முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் சரக்கு அடிப்படையிலான தங்க முதலீடுகளும் உள்ளன. இதில் சரக்கே தங்கம் தான், மியூச்சுவல் ஃபண்ட்கள்தான் தங்க ETF நிதி. தங்க நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட்களால் தங்க நிதித் திட்டம் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தங்கத்தை நேரடியாக வாங்குவதைக் காட்டிலும் தங்க நிதியில் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பானது. இதில் முதலீடு செய்ய மிகப்பெரிய தொகை தேவையில்லை. வெறும் ரூ.500-ஐ எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம். மூன்றே நாட்களில் கூட பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

மற்ற செய்திகள்