"Warning-லாம் கிடையாது.. இத செஞ்சா உடனே அக்கவுண்டை தூக்கிடுவோம்".. எலான் மஸ்க் அடுத்த அதிரடி..

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

போலி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எவ்வித முன்னெச்சரிக்கையும் வழங்கப்படாமல் நிரந்தரமாக அவர்களது கணக்கு முடக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | இவ்வளவு டன் தங்கமா?.. திருப்பதி ஏழுமலையானின் மொத்த சொத்து மதிப்பு.. தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை..!

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார்.

முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என மஸ்க் குறித்த பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையே, ட்விட்டரில் verified badge எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு பயனர்கள் பணம் செலுத்தவேண்டும் என தகவல்கள் வெளியானது. இது இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக verified badge-க்கு மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தார் மஸ்க்.

தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் குறித்த பல்வேறு அறிவிப்புகளால் மஸ்க்கின் ட்விட்டர் பக்கம் நிரம்பி வழிகிறது. அந்த வகையில், பிறரது பெயரில் அக்கவுண்ட் வைத்தருப்பவர்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார் மஸ்க். அதில், போலி கணக்குகள் வைத்திருப்பவர்கள் அதனை Parody Account (பகடி அக்கவுண்ட்) என தெளிவாக குறிப்பிட வேண்டும். இல்லையென்றால் அந்த கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என மஸ்க் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள ட்விட்டர் செய்தியில்,"இனி, "பகடி" என்பதைத் தெளிவாகக் குறிப்பிடாமல், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் எந்த Twitter அக்கவுண்டும் நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்படும்" என எச்சரித்திருக்கிறார். பிரபலங்களின் பெயரில் இவ்வாறு போலி கணக்குகள் உருவாக்கி குழப்பங்களை சிலர் ஏற்படுத்திவருவதை தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Also Read | "இதுக்கு மேல தான் இத்தன வருசமா ஹாஸ்பிடல் இருந்துச்சா?".. லீக் ஆன தண்ணி.. என்னடான்னு தோண்டி பாத்தப்போ வெளியே தெரிஞ்ச 132 வருச மர்மம்!!

ELON MUSK, BILLIONAIRE ELON MUSK, TWITTER, TWITTER PLAN, PARODY ACCOUNTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்