சென்னை கந்தன்சாவடி இரும்பு சாரம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையின் கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.


சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருந்த 30க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

 

இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பீகாரைச் சேர்ந்த ராஜன் சவுத்ரி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


இத்துடன் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்திருக்கிறது. இரும்பு சாரம் சரிந்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு, காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 23, 2018 10:29 AM #CHENNAISCAFFOLDINGCOLLAPSE #KANTHANCHAVADI #TAMIL NADU NEWS