நேற்றிரவு 11 மணியளவில் சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி பறக்கும் ரெயிலொன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பொதுப்பெட்டியில் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவரை, வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

 

அந்த வாலிபரிடமிருந்து தப்ப முயற்சித்த பெண் உதவிக்காக கத்திக் கூச்சலிட்டார். அவரின் கூச்சல் பக்கத்து பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த ரெயில்வே காவலருக்குக் கேட்டது.

 

ஆனால் ரெயில் ஓடிக்கொண்டிருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எனினும் ரெயில் அடுத்த நிலையத்தில் நின்றபோது அந்த காவலர் ஓடிவந்து அந்த பெண்ணை மீட்டார்.

 

மேலும், அந்த இளைஞனைப் பிடித்து ரெயில்வே காவல் நிலையத்திலும் ஒப்படைத்தார். இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 

துணிச்சலாக இளைஞரை மடக்கிப்பிடித்த, ரெயில்வே காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

BY MANJULA | APR 25, 2018 5:33 PM #RAPE #SEXUALABUSE #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS